தமிழ்நாடு

முறைகேடு புகார் எதிரொலி: மறுதேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அறிவிப்பு

Published

on

கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலை நடத்திய எஞ்சினியர் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடத்தவேண்டிய செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதனால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிய வந்தது

இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வுக்கு பதில் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பி பொன்முடி அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

 

Trending

Exit mobile version