தமிழ்நாடு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் திடீர் முடக்கம்!
திமுக ஆட்சி தோன்றியதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டன என வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
இந்த தகவல் ஆளும் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது