Connect with us

தமிழ்நாடு

காலில் விழுந்து பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரியவர்: எடப்பாடி பழனிச்சாமியை சீண்டும் பாஜக!

Published

on

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு காட்டமான பதில்களை அளித்தார். இதற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

#image_title

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமியிடம் அண்ணாமலை மறைமுகமாக அதிமுகவை விமர்சிக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ஏன் அவரைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கிறார். அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.

அரசியலில் இருப்பவர்கள் அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அதைவிடுத்து அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என பேசி வருகிறார் என விமர்சித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்.

அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் என பதிவிட்டுள்ளார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?