Connect with us

இந்தியா

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணிநேர இன்டர்ன்ஷிப் கட்டாயம்: யுஜிசி அதிரடி அறிவிப்பு

Published

on

ugc

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணி நேரம் இன்டர்ன்ஷிப் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இரண்டு வகையான ஆய்வுப் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். அதாவது மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலோ, ஆய்வு மனப்பான்மையை வளர்க்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

1. 4 ஆண்டுகால இளங்கலைப் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 20 கிரெடிட்டுகளைப் பெற பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ பட்டத்துடன் வெளியேறும் மாணவர்கள், முறையே இரண்டாவது செமஸ்டர் அல்லது நான்காவது செமஸ்டரில் 8 முதல் 10 வாரப் பயிற்சியை எடுக்க வேண்டும்.

2. பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், இரண்டாவது அல்லது நான்காவது செமஸ்டர் தேர்வுக்குப் பின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். அவர்கள் உயர் கல்வி நிறுவனங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் அல்லது தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஆய்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

3. ஒவ்வொரு ஆய்வுப் பயிற்சியாளரும் (இன்டர்ன்), தன்னுடைய பயிற்சிக் காலத்தில் 450 மணி நேர ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்.

4. சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பை முடிக்க விரும்பும் மாணவர்கள் 450 மணி நேர ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 4 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு மாணவர்கள், ஆய்வுப் பயிற்சியில் 450 மணி நேர ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 4 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு மாணவர்கள், ஆய்வுப் பயிற்சி கட்டாயம் பெற வேண்டும்

5. மாணவர்கள் இந்த ஆய்வுப் பயிற்சியை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளலாம். பயிற்சி மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஆய்வு மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்படுவார்.

 

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?