சினிமா

பிக் பாஸ் இல்லம் உள்ளே வந்த ஐஸ்வர்யாவின் தாய் தாடி பாலாஜியிடம் அழுது மன்னிப்பு கேட்டார்.

Published

on

 

சென்னை: மகள் செய்த தவற்றுக்காக ஐஸ்வர்யாவின் அம்மா தாடி பாலாஜியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்தாக ஐஸ்வர்யா தத்தா தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்குச் சர்வாதிகாரி வேடம் கொடுக்கப்பட்டது. இதை அவர் வெற்றிகரமாக நடத்திக்காட்டினால் எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று அவரிடம் பிக்பாஸ் கூறினார்.

மேலும் இவர்கள் மூவருக்கும் மற்றவர்களின் நடவடிக்கைகளைத் தனி அறையில் டிவி வழியாகக் காண்பிக்கப்பட்டது. தன்னைப் பற்றிப் பேசுபவர்களை டிவியில் கண்ட ஐஸ்வர்யா நடிகர் பாலாஜி மீது குப்பையைக் கொட்டும்படி கட்டளை பிறப்பித்தார். அதை மற்றவர்கள் செய்ய மறுத்த போது தானே குப்பையை எடுத்து பாலாஜி மீது கொட்டினார்.

இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா கரடி பொம்மையுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். சர்வாதிகாரி டாஸ்கின்போது தன் மகள் குப்பையைக் கொட்டியதற்காகத் தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரோ இதைப் போய்ப் பெரிதாக எடுத்துக் கொண்டு, அது என் பொண்ணு மாதிரி என்று கூறி ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு ஐஸ்வர்யாவின் தாயார் வருகை தந்துள்ளார். இந்தக் காட்சிகளைப் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ள புரமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

Trending

Exit mobile version