தமிழ்நாடு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம், வைரம் நகைகள் கொள்ளை!

Published

on

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

#image_title

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் லாக்கரில் இருந்த பல லட்சம் மதிப்பிலான 60 சவரன் தங்கம் மற்றும் வைரம் நகைகளை காணவில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா தனது புகாரில் வீட்டில் வேலைசெய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தங்கையின் திருமணத்தின் போது அந்த நகைகளை பயன்படுத்திவிட்டு பின்னர் லாக்கரில் வைத்திருந்ததாகவும் ஆனால் தற்போது அந்த நகைகள் மாயமாகயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version