Connect with us

சினிமா

நந்தினியின் பிடியில் குந்தவை.. மணிரத்னம் காலில் மீண்டும் விழுந்த ஐஸ்வர்யா ராய்!

Published

on

மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனல் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிடியில் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாகவும் ஊமை ராணியாகவும் நடித்து மிரட்டிய ஐஸ்வர்யா ராயின் நடிப்புக் குறித்து இயக்குநர் மணிரத்னம் மேடையில் பாராட்ட, உடனடியாக எழுந்து சென்ற ஐஸ்வர்யா ராய் இயக்குநர் மணிரத்னம் காலில் விழுந்து தனது நன்றியை தெரிவித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

#image_title

பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் இன்னும் 2 தினங்களில் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை சென்னை, மும்பை, டெல்லி, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு என பல நகரங்களில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரமோட் செய்து வருகின்றனர்.

தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கான ப்ரமோஷனகளை செய்தால் ஓவர்சீஸிலும் நல்ல கலெக்‌ஷன் வரும் என கூறுகின்றனர். ஆனால், அந்த அளவுக்கு அதற்கான முயற்சிகளை இயக்குநர் மணிரத்னமோ அல்லது லைகா நிறுவனமோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

வட மாநிலங்களில் கூட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து இந்த படத்துக்கு பெரியளவில் ப்ரமோஷன் செய்தால் தான் முதல் பாகம் பெற முடியாத வசூல் வேட்டையை அங்கே இரண்டாம் பாகமாவது செய்யும் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் கதைப்படி எதிரிகள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் இணைந்து செல்ஃபி எடுப்பதும் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து விளையாடுவதாக என்ஜாய் செய்து வருகின்றனர்.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?