Connect with us

இந்தியா

ஏர் இந்தியாவில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி.. டாடா தலைவருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு

Published

on

டாடாவின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் பயணி நேரடியாக டாடா தலைவர் சந்திரசேகர் அவர்களுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது போதை ஆசாமி ஒருவர் அந்த பெண்ணின் அருகே வந்து நின்றார். அதன்பிறகு அவர் திடீரென அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி சத்தம் போட்ட போது சக பயணிகள் அந்த போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து அந்த பெண் பயணிக்கு வேறு இருக்கையை ஒதுக்கினர். அவர் அந்த விமானத்தில் மிகவும் அதிருப்தி உடன் பயணம் செய்தார்.

இந்த நிலையில் விமானம் டெல்லியில் தரை இறங்கியதும் எதுவுமே நடக்காததுபோல் விமான பணியாளர்கள் மற்றும் அந்த போதை ஆசாமி நடந்து கொண்டது அந்தப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் விமானம் தரை இறங்கியவுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காத்திருந்த அந்த பையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனையடுத்து டாடா தலைவர் என் சந்திரசேகரன் அவர்களுக்கு அந்த பெண் கடிதம் எழுதினார். நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்தபோது ஏற்பட்ட பயணம் தான் தனக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான பயணம் என்றும் விமான பயணிகளில் ஒருவர் தன் மீது சிறுநீர் கழித்ததை விமான பணிப்பெண்கள் கண்டுகொள்ள இல்லை என்றும் அந்த நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து என் சந்திரசேகர் அவர்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் அந்த போதை ஆசாமிக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறக்க தடை செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?