Connect with us

சினிமா செய்திகள்

படப்பிடிப்பின்போது திடீர் விபத்து: நடிகர் சேரன் காயம்!

Published

on

நடிகரும் இயக்குனருமான சேரன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நந்தா பெரியசாமி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார் என்பதும் முக்கிய வேடத்தில் நடிகரும் இயக்குனருமான சேரன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி, சரவணன், சினேகன், விக்னேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகே நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நடிகர் சேரன் கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு 8 தையல்கள் போடப்பட்டன.

ஆனால் அனைத்து நடிகர்களும் இருப்பதால் தன்னால் படப்பிடிப்பு ரத்து செய்யக்கூடாது என்பதற்காக அவர் காயத்துடன் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார். அதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கதை என்பது ஒரு வீட்டை ஒரு குடும்பத்தினர் எப்படி கஷ்டப்பட்டு கட்டுகின்றனர் என்பதுதான். இந்த வீட்டை கட்டுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீடு கட்டப்படுவதற்கு கல் எடுக்கப்படுவது போன்ற ஒரு காட்சியில் நடித்தபோது தான் நடிகர் சேரனுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?