Uncategorized
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்
ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.
இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.
இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.
😄ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊
இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 … அப்படி ஏதாவதா? என்று…🤭
400 ரூபாய் மட்டுமே என்றான்.😜
வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂
…சார் நீங்க,
நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன்.
..நானும் வரேன்.
…சார் நானும்
…ஐயா வாங்க
..அம்மா வாங்க
…அக்கா நீயுமா
.”வா வா, உக்கார்ந்து.
..400, ரூவா,
…வாவா
..அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣
“வாங்க சார்… வாங்க சார்…
ஸ்டராங்கான நாற்காலி சார்…
இது சீக்கிரத்துல உடையாது சார்…
400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்”🤪 என்று கூவினான்.
நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.
நல்லா யோசிக்கணும்.
சாத்தியமான்னு பார்க்கணும்.
ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.
இனி வருவது தேர்தல் காலம்
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்
சிந்தித்து செயல்படுங்கள் மக்களே..!!













