இந்தியா

கேர்ள் ப்ரண்ட் பயணத்தை தடுக்க இளைஞர் செய்த விபரீத செயல்.. சிறையில் கம்பி என்ணும் பரிதாபம்!

Published

on

தன்னுடைய கேர்ள் பிரண்டுகள் தன்னை விட்டு பிரிந்து பயணம் செய்ய இருப்பதை அடுத்து அவர்களின் பயணத்தை தடுப்பதற்காக விமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வியாழன் என்று டெல்லியில் இருந்து புனே செல்ல இருந்த விமானத்தில் திடீரென வெடிகுண்டு இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் கால் சென்டருக்கு மர்மமான போன் அழைப்பு ஒன்று வந்தது. இதனை அடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

உடனடியாக டெல்லியில் இருந்து புனே செல்லும் விமானத்தில் பயணம் செய்த 182 பயணிகள் மற்றும் அவர்களுடைய லக்கேஜ்கள் முறையாக சோதனை செய்யப்பட்டது. பல மணிநேர சோதனைக்கு பின்னர் விமானத்தில் எந்த விதமான ஆபத்தான பொருட்களும் இல்லை என்றும், சந்தேகத்திற்கு இடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்து இது ஒரு புரளி என்பது தெரிய வந்ததை அடுத்து காவல்துறையினர் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அந்த தொலைபேசி எண் பிரகாஷ் என்ற இளைஞருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசா ரித்த போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

பிரகாஷ் தனது நண்பர்களான ராகேஷ் மற்றும் குணால் ஆகியோர்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றதாகவும் அங்கு இரண்டு பெண்களுடன் நட்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இரண்டு பெண்கள் மணாலியில் இருந்து புனே செல்ல இருப்பதை அடுத்து அவர்களது பயணத்தை தடுக்க வெடிகுண்டு புரளி போன் அழைப்பு விடுத்ததாக பிரகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த பெண் தோழிகள் தங்களுடன் இன்னும் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு புரளி அனுப்ப நண்பர்கள் தூண்டியதாக அவர் தனத் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரகாஷ் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது இரண்டு ம் நண்பர்கள் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு தலைமறைவாக இருக்கும் அவருடைய இரண்டு நண்பர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை விட்டு கேர்ள் ஃபிரண்ட் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக விளையாட்டாக வெடிகுண்டு புரளி அனுப்பி விடுத்த இளைஞர் ஒருவரால் பல மணி நேரம் விமான பயணம் தடைப்பட்டது என்பதும் 182 பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகாஷ் தற்போது சிறையில் பரிதாபமாக கம்பி எண்ணி கொண்டிருக்கின்றார்.

Trending

Exit mobile version