தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: அரியலூர் கூலி தொழிலாளி பயங்கரம்!

Published

on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூலி தொழிலாளி ஒருவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

#image_title

ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் அந்த பகுதியில் உள்ள பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு சிறுமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை விடாது காதல் தொல்லை கொடுத்து வந்த கூலி தொழிலாளி அஜித் சம்பவத்தன்று பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கூலி தொழிலாளி அஜித்தால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி புகார் அளித்தனர். இதனையடுத்து கூலி தொழிலாளி அஜித்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின்னர் காவல் துறையினர் அஜித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Trending

Exit mobile version