Connect with us

இந்தியா

17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

Published

on

சமீப காலமாக விமானங்கள் பயணிகளை விமான நிலையங்களிலேயே விட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் 17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டு விட்டு குவைத் செல்லும் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் விஜயவாடா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றதால் 17 பயணிகள் விஜயவாடா விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

காலை 11 மணிக்கு விமானம் கிளம்பும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9:55 மணிக்கு விமானம் புறப்பட்டு விட்டதாக கூறப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் விமானம் புறப்படும் நேரம் மதியம் 1.10 என்றும் புறப்படும் நேரம் மாற்றம் குறித்து தங்களுக்கு எந்தவித தகவலும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

1.10க்கு விமானம் புறப்படும் என்பதால் 11 மணிக்கு விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் புதிய புறப்படும் நேரம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

பயணிகள் விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய ஊழியர்களிடம் இது குறித்து கூறிய போது ’டிக்கெட்டுகள் விற்கப்படும் போது பல்வேறு இணையதளங்களில் நேரமாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் புறப்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டால் இணையதளங்களில் நாங்கள் எவ்வாறு சரி பார்க்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் எஸ்எம்எஸ் அல்லது போன் கால் செய்ய வேண்டாமா என்று பயணிகளில் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான முன்கூட்டியே கிளம்புகிறது என்றால் அது குறித்த முறையான அறிவிப்பை பயணிகள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?