ஆரோக்கியம்
மூளைக்கு பலம் தரும் இந்த வகை கீரை!
வல்லாரை கீரை: (vallarai keerai)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூளைக்கு பலம் தரும். வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.
வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். இவை நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்யும். 8 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
முடக்கத்தான்கீரை: (Mudakathan Keerai)
கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். தினமும் முடக்கத்தான் சாறு அருந்திவர மூட்டு வலி, வாயு தொல்லைக்கு நல்லது.
முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும்.
புண்ணக்கீரை(பிண்ணாக்குக் கீரை): (punnakku keerai)
சிரங்கும், சீதளமும் விலக்கும். பருப்பு சாதத்தில் நெய்யோடு இந்த பிண்ணாக்கு கீரையை சேர்த்து சாப்பிட்டு வர உடல்சூடு, சீதபேதி, ரத்த பேதி, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் தீரும்.
பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது.
பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவும் பேருதவி புரிகிறது.
புதினாக்கீரை: (Mint)
ரத்தத்தை சுத்தம் செய்யும். அஜீரணத்தை போக்கும். புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.
நஞ்சுமுண்டான் கீரை:(nangu kondan keerai)
விஷம் முறிக்கும். நஞ்சு கொண்டான் கீரை, நச்சு கொட்டை கீரை, லச்ச கெட்ட கீரை, நஞ்சுண்டான் கீரை என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த கீரை மூட்டு வலியை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
தும்பைகீரை:(thumbai)
அசதி, சோம்பல் நீக்கும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்
முரங்கைகீரை:(murungai keerai)
சளி, இருமலை துளைத்தெரியும். முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.
மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.