இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.01.2026

- மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சியில் தலைவர் பதவியை கைப்பற்ற பாஜகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்தன. காங்கிரசின் 12 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் தேஜஸ்ரீ காஞ்சலே வெற்றி பெற்றார். இதனால் 25 ஆண்டுகளாக சிவசேனா கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை அக்கட்சி இழந்துள்ளது.
- அரசு டெண்டர்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அரசு திட்டம். – 2020 கல்வான் மோதலுக்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் சீன உதிரி பாகங்கள் தொழில்நுட்பக் கருவிகளின் தட்டுப்பாட்டால் பல திட்டங்கள் முடங்கி கிடப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாம்.
- தங்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து திடீர் சோதனை என்ற பெயரில் ஆவணங்களை திருடியதாக கொல்கத்தா காவல்துறையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகாரளித்ததன் பேரில் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது மிரட்டல் ஆவணங்களை திருடியது மின்னணு ஆவணங்களை சேதப்படுத்தியது ஆகிய 4 பிரிவுகளில் அமலாக்கத்துறை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் கேட்டால் 9498452110, 9498452120, 9498452130 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். அமைச்சரின் பேரிலோ அல்லது அதிகாரிகளின் பேரிலோ ஆவணப்பதிவிற்கென்று கையூட்டு கேட்டால் ctsec@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியிலோ புகார் அளிக்கலாம் என பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
- முதன்முறையாக இந்தியாவுக்கான தாலிபான் தூதரக அதிகாரியை நியமித்தது ஆப்கானிஸ்தான் அரசு.
- மத்தியப்பிரதேசம் மாட்டுச்சாணம் சிறுநீரில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்க ஜபல்பூர் பல்கலையில் ரூ.3.50 கோடி செலவில் நடந்த ஆய்வில் முறைகேடு என விசாரணை. ரூ.1.92 கோடிக்கு சாணம் சிறுநீர் வாங்கியதாகவும் ஆய்வுக்காக பல நகரங்களுக்கு பயணம் செய்ய மீதி தொகை செலவானதாகவும் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
- பின்னால் வந்தவர்கள் முந்திக் கொண்டனர். டிரம்புடன் மோடி பேசாததால் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. எனவே கூடுதல் வரிவிதிப்புகள் தவிர்க்க முடியாது. – அமெரிக்க வர்த்தக மந்திரி பேச்சு.













