இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

ஜனறாயகன் திரைப்படத்திற்கு இன்று காலையில் தணிக்கைச் சான்று வழங்கலாம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு மாலையில் தடை விதித்து வழக்கை 21 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்ததால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீசாக இயலாது.
1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான பராசக்தி திரைப்படத்துக்கு 52 இடங்களில் MUTE மற்றும் 27 இடங்களில் காட்சிகளில் வசனங்களில் மாற்றம் செய்து திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்று வழங்கப்பட்டதால் நாளை 10ம் தேதி பராசக்தி திரைக்கு வருகிறது.
ஆவணங்கள் தயாரிக்கும்போது தவறான மதிப்பினை பதிவு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆவண எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதார் குறித்த தகவல்கள் மக்களுக்கு எளிதாகச் சென்றடைய உதவிடும் வகையில் “உதய்“ அடையாளச் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் குறித்த அப்டேட்கள் நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை வழங்கும்போது இந்த அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படும். என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI தெரிவித்துள்ளது. கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் இதனை வடிவமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக WHATSAPP உடன் தமிழ்நாடு அரசு இணைந்து பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை பெறும் வசதியை தொடங்கியுள்ளது. இதற்காக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் WHATSAPP நிறுவன அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் அமைச்சர் பி.டி.ஆர். முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை பெற 7845252525 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் சான்றிதழ்களைப் பெறலாம். – META நிறுவன இந்திய தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ்.













