உலகம்
நான் தான் போரை நிறுத்தினேன்: ட்ரம்ப் ‘பரபர’ பேச்சு
பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகமாக வணிகம் செய்ய உள்ளது. அணுஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது’ என்று டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.























