இந்தியா
நடிகை சரோஜாதேவி அவர்கள் காலமானார்

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை சரோஜாதேவி அவர்கள் இன்று காலை பெங்களுரூவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயத 87.
அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சரோஜாதேவி 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி கர்நாடகாவில் மைசூரு ராஜ்ஜியத்தில் பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். சரோஜா தேவி உண்மைப் பெயர் ராதாதேவி கவுடா. இவர் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வரி என்கிற தனது அக்கா சீதாதேவி அவர்களின் மகளை தத்தெடுத்தும் வளர்த்து வந்தார்.
தனது அவரது 13வது வயதில் ஒரு விழாவில் பாடும்போது பிரபல திரைப்படத்“ தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக விளங்கிய பி.ஆர்.பந்துலு என்கிற கிருஷ்ணமூர்த்தி அவரை நடிக்க அழைத்தார். 1955ல் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார். தமிழில் 1958ல் எம்.ஜி.ஆருடன் நாடோடிமன்னன் என்ற படத்தில் அறிமுகமானார். அவர் திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவரின் அனுமதியுடன் நடித்தார்.
அவர் தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருடன் 26 படங்கள், சிவாஜிகணேசனுடன் 22 படங்கள் ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ரவிச்சந்திரன் ஆகிய பிற நடிகர்களுடன் 15 படங்கள் என தமிழில் மொத்தம் 63 படங்களில் நடித்துள்ளார்.
சரோஜாதேவி திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.
திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.
ஒரு காலத்தில் ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
அவரது 100வது திரைப்படம் பெண் என்றால் பெண் என்ற தமிழ்த் திரைப்படமாக அமைந்தது.
அவர் நடித்துள்ள திரைப்படங்களில் நாடோடிமன்னன், இருவர் உள்ளம், அரசகட்டளை, அன்பேவா, ஆலயமணி, கல்யாணப்பரிசு, எங்க வீட்டுப் பிள்ளை, பாகப்பிரிவினை, பாலும் பழமும், புதிய பறவை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்கள் உள்ளன.
அவர் பெற்ற விருதுகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- 2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
- 1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
- 1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது
- 1980 கர்நாடக அரசின் அபினண்டன -காஞ்சனா மாலா விருது
- 1965 சிறப்பு பெயராக “அபிநய சரஸ்வதி ” – கர்நாடக அரசு
இந்திய திரையுலகம் ஒரு சிறந்த நடிகையை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.






