இந்தியா
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இப்போது 4 எம்எல்ஏ பதவிடங்கள் காலியானது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகியவையே தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் ஒரு தொகுதிக்கு சராசரியாக ரூ. 5 கோடி செலவாகும் என்பதால் 4 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ.20 கோடி செலவாகும் என்று மதிப்பிடப் படுகிறது. இந்த கூடுதல் செலவினம் காரணமாக மாநிலத்திற்கான மத்திய நிதிப் பகிர்வில் துண்டு விழும் என்று கூறப்படுகிறது. இதனைச் சமாளிக்க மாநில அரசு வரி விதிப்பை கூடுதலாக்க வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.
இப்போது காலியாகும் இந்த 4 தொகுதிகளும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்டது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை சம்பந்தப்பட்ட கட்சியிடமிருந்தோ அல்லது அந்த வேட்பாளர்களிடமிருந்தோ பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இதனால் சாமானிய பொது ஜனத்திற்கு கூடுதல் வரிச்சுமை ஏதம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


















