Connect with us

டிவி

‘உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன்!’- இன்று ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் அறிவிப்பு #ViralPromo

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி நாள் இன்று. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது இன்று அறிவிக்கப்படும்.

பலகட்ட பரபரப்புகளையும் சர்ச்சைகளையும் தாண்டி, பிக் பாஸின் இந்த சீசன் முடிவுக்கு வருகிறது. இந்த சீசனின் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றார்கள். ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ, சோம் மற்றும் கேபி ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு சென்றனர்.

கடைசி வாரத்தில் கேபி, 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தனக்குப் பணத் தேவை இருப்பதாலும், இறுதிச் சுற்றில் வெல்லப் போவதில்லை என்று நினைத்ததாலும் இந்த அதிர்ச்சிகர முடிவை எடுத்து, தன் ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தார் கேபி. அதே நேரத்தில், அவரது முடிவு சரிதான் என்றும் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

காரணம், நடிகர் ஆரிக்கும், பாலாவுக்கும் இடையில் தான், டைட்டிலை வெல்வதில் பலத்தப் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவரைத் தவிர்த்து ரம்யா பாண்டியன், ரியோ மற்றும் சோம் ஆகியோருக்கும் டைட்டிலை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் கேபி, சரியான நேரத்தில் வெளியேறி விட்டார் என்று பலரும் சொல்கிறார்கள்.

இன்று 6 மணி முதல், விஜய் டிவியில் பிக் பாஸின் இறுதி நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் யார் வெற்றி பெற்றார் என்பது அறிவிக்கப்படும்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?