டிவி

‘உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன்!’- இன்று ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் அறிவிப்பு #ViralPromo

Published

on

By

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி நாள் இன்று. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது இன்று அறிவிக்கப்படும்.

பலகட்ட பரபரப்புகளையும் சர்ச்சைகளையும் தாண்டி, பிக் பாஸின் இந்த சீசன் முடிவுக்கு வருகிறது. இந்த சீசனின் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றார்கள். ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ, சோம் மற்றும் கேபி ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு சென்றனர்.

கடைசி வாரத்தில் கேபி, 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தனக்குப் பணத் தேவை இருப்பதாலும், இறுதிச் சுற்றில் வெல்லப் போவதில்லை என்று நினைத்ததாலும் இந்த அதிர்ச்சிகர முடிவை எடுத்து, தன் ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தார் கேபி. அதே நேரத்தில், அவரது முடிவு சரிதான் என்றும் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

காரணம், நடிகர் ஆரிக்கும், பாலாவுக்கும் இடையில் தான், டைட்டிலை வெல்வதில் பலத்தப் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவரைத் தவிர்த்து ரம்யா பாண்டியன், ரியோ மற்றும் சோம் ஆகியோருக்கும் டைட்டிலை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் கேபி, சரியான நேரத்தில் வெளியேறி விட்டார் என்று பலரும் சொல்கிறார்கள்.

இன்று 6 மணி முதல், விஜய் டிவியில் பிக் பாஸின் இறுதி நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் யார் வெற்றி பெற்றார் என்பது அறிவிக்கப்படும்.

Trending

Exit mobile version