இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.13280க்கும் சவரன் ரூ.106240க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி வலை – கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.307க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.307000க்கும் விற்பனை ஆகிறது.
- பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12500லிருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத மே மாத ஊதியம் ரூ.10000 மும் வழங்கப்படும்.
- இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் உறுதி.
- பெண்களைப் போர்முனைப் பணிகளில் சேர்ப்பதில் பாலின சமத்துவம் என்பதை விட பாலின நடுநிலைமையை நோக்கி இந்திய ராணுவம் நகர்ந்து வருகிறது. ”ஆண்-பெண் பாகுபாடின்றி போர்க்களத்திற்கு தேவையான உடற்தகுதி செயல்திறன் ஆகியவற்றை யார் நிறைவு செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை” – உபேந்திர திரிவேதி, ராணுவ தளபதி
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பெரும் போராக வெடிக்கும் என்றும் கத்தார் எச்சரிக்கை
- டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் மோடியுடன் பராசக்தி படக்குழு.
- சென்னையில் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் “சென்னை உலா“ சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம். வாரமுழுதும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் வார இறுதி நாள்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையு ம் இயக்க திட்டம்.
- இந்தியா ஈரானுடன் வர்த்தகம் செய்வதால் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படம். – டிரம்ப். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு..
- இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. – தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
- குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தங்களுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வேறு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெறும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை பின்பற்றி குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் அந்த பணி நியமனங்களில் அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் எந்த பங்கும் வகிக்கவில்லை என்ற தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
- கேரளா என்று இப்போது அதிகாரபுர்வமாக பயன்படுத்தப்படும் மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற முடிவு.













